Total Pageviews

Wednesday, August 28, 2013

கை மணம் மண்மணம் சமணம்

மதுரையில் நடந்த விருட்சத் திருவிழா மலைகளுக்கான விழா, குழந்தைகளுக்கான விழா என்பதையும் தாண்டி குடும்பங்களுக்கான விழாவாகவும் இருந்தது.

நிகழ்வில் வெளியிடப்பட்ட “மதுர வரலாறு” நூலைப் பெற்றுக் கொண்டவர் செட்டிப்புடவு மலையடிவாரத்தில் பதினைந்து வருடங்களாக பருத்திப்பால் விற்கும் ”ஜெயமணி அம்மாள்” என்பதே நிகழ்வின் சிறப்புக்குச் சான்று.

பிரம்மாண்டக் குடையாய் விரிந்த ஆலமர நிழலில் நிகழ்வரங்கம். அருகே தாமரைப் பூத்த தடாகம், சுறுசுறுப்பான தன்னார்வலர்கள், இயற்கை உணவு, கிட்டிப்புள், பரமபதம், பம்பரம், பல்லாங்குழி, கலைடாஸ்கோப் உள்ளிட்ட குழந்தைகளுக்கான பரிசுகள், ஓரிகமி, க்ளே மாடலிங், படம் வரைதல், கட்டுரை, செய்கைப் பாடல்கள் முதலிய செயல்பாடுகள், நடமாடும் கழிவறை என அனைத்து ஏற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

நிகழ்வு நடந்த நேரம் முழுதும் சமர்த்தாகத் தூங்கி, நிகழ்வு முடிந்த பிறகுக் கண்விழித்து நடந்து, ஓடி, விளையாடித் தனது முழு ஒத்துழைப்பையும் நல்கிய ”அனன்யா”  பசுமை நடைக் குழுவின் இளைய அங்கத்தினர்.

எந்த ஒரு நிகழ்வின் வெற்றியும் அதற்கான திட்டமிடுதலையும் அதைச் செயல்படுத்துபவர்களையும் சார்ந்தே அமைகிறது. அதற்கு விருட்சத் திருவிழா ஒரு உதாரணம். விழா முடிந்த பிறகு நடந்த தன்னார்வலர் கூட்டத்தின்போது அனைவருக்கும் வழங்கப்பட்ட பருத்திப் பாலில் ஜெயமணி அம்மாளின் கைமணமும், மதுர மண் மணமும் 



No comments: